Sunday, December 30, 2018

TAMS திருவாரூர் மாவட்ட செயற்குழு கூட்டம் 29.12.2018 அன்று நடைபெற்றது.

திருவாரூர்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் 

 29-12-2018 அன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்திற்கு
வருகைதந்து
கருத்துக்களை வழங்கிய சங்கப் பொறுப்பாளர்கள்
அனைவருக்கும் மிக்க நன்றி,,,,,,

புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட *திரு சந்திரசேகரன்* அய்யா
அவர்களுக்கும்,,,,

 மகளிரணி 
திருமதி அருண்சாந்தி, திருமதி ஆனந்தவள்ளி 
அவர்களுக்கும்,,,,

 தலைமை ஏற்று சிறப்பாக உரை வழங்கிய
மாவட்டத் தலைவர்
திரு இரா.சிவகுரு 
அவர்களுக்கும்,,,,,

 வரவேற்பு நல்கிய அன்பிற்கினிய
அமைப்புச் செயலாளர்
திரு.M.அருள்நிக்கோலஸ்
 அவர்களுக்கும்,,,,

நிதி அறிக்கை தாக்கல் செய்திட்ட ஆற்றல் மிகு
பொருளாளர்
திரு.கார்த்தி
 அவர்களுக்கும்,,,,,

 தீர்மானங்கள் குறித்து சிறப்பாக விவாதம்
செய்த அய்யா மதிப்புமிகு *இளம்பரிதி* அவர்களுக்கும்

 முனைவர் *திரு* *சீனிவாசன்*   அமைதியின் சிகரம் *திரு ரவி*  
எங்கள் 
துணிச்சல் *திரு ஹ.உலகநாதன்* 
மதிப்புமிகு திரு. ந.ரகுபதி. 
அறிவியல் ஆசிரியர் *திருமிகு விஸ்வநாதன்* 
நன்னிலம் ஒன்றியம் ஆங்கில ஆசிரியர் *திரு சரவணன்* 
மதிப்புமிகு அன்பின் *திரு பிரபாகரன்* . 
எழுச்சிமிகு திரு *இரா.வீரசேகரன்* 
இணையத்தின் இளவல் சட்ட ஆலோசகர் *திரு மீனா சாமிநாதன்* 
ஆகியோருக்கும்...

 தீர்மானங்களை நிறைவேற்றித் தந்த நம்பிக்கைமிகு *திரு பாரதிராஜா* 
அவர்களுக்கும்

 நன்றி நன்றி நன்றி.   

அன்புடன் 
இரா.சக்திவேல். 
மாவட்ட செயலாளர்
TAMS திருவாரூர்

🙏🙏🙏🙏🙏🙏🙏








🔥🔥🔥🔥🔥🔥🔥
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
TAMS,திருவாரூர் மாவட்டம்.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
நேற்றைய மாவட்ட செயற்குழு கூட்டத்தில் முன்மொழிந்த  தீர்மானங்கள்,,,

1.  கஜா புயலின் போது நிவாரணப் பொருட்களை நேரடியாக களத்திற்கே வந்து சுமார் ₹ 5,00,000 மதிப்புள்ள பொருட்களை தன் கரங்களால் வழங்கிய கஜாப் புயலின் *கருணைநாயன் மாநிலத் தலைவர் திரு.கு.தியாகராஜன்* அவர்களுக்கு நன்றியை தெரிவிப்பது...

 2 கஜாப் புயலின்போது நிதியுதவி பொருளுதவி வழங்கிய ஆசிரியப் பெருமக்களுக்கு நன்றியைத் தெரிவிப்பது.

 3 கஜாப் புயல் தாக்கிய அடுத்த சில நாட்களிலே களத்தில் நேரடியாக சுமார் ₹ 5,00,000 மதிப்புள்ள பொருட்கள் வழங்கிய மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் மிக்க நன்றியைத் தெரிவிப்பது..

 4 NMMS தேர்வினை கஜாப் புயலால் பாதிக்கப்பட்ட நமது மாணவச் செல்வங்களுக்காக தள்ளி வைக்க முன்மொழிந்து தள்ளி வைத்த   தலைவருக்கு நன்றியைத் தெரிவிப்பது ..

5. முன்னர் நடைபெற்ற செயற்குழுவின் தீர்மானத்தின்படி மாநிலப் பங்குத் தொகையை செலுத்திய மாவட்ட பொருளாளர் *திரு கார்த்தி* அவர்களுக்கும் நன்றியைத் தெரிவிப்பது

6. நிதி ஆண்டின் ஆண்டு வரவு செலவு கணக்குகளை செயற்குழுவில் தாக்கல் செய்வது.    

7. வங்கியின் மூலம் வரவு செலவு கணக்குகளை பராமரித்தல்  

8.ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் உயிரோட்டமாய் பங்கு கொள்ளும் நமது இயக்கம் அது வெற்றி பெறுவதற்கான வழிகளை தொடர்ந்து வகுத்தல் .

 9. செயல்படாத பொறுப்பாளர்களை செயல்பட வைத்தல் .

10. உறுப்பினர் சேர்க்கை செய்திட்ட நிர்வாகிகளுக்கு  நன்றி தெரிவிப்பது.

 தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை  செய்திட வலியுறுத்துவது. 

11 ஒன்றிய அளவில் எழுச்சியோடு கூட்டம் நடத்திய *நன்னிலம் வலங்கைமான்* பொறுப்பாளர்களுக்கு பாராட்டுத் தெரிவிப்பது மற்ற ஒன்றியங்களிலும் நடத்திட ஆலோசிப்பது.

 12. சிறப்பாக செயல்படும் நாம் நமக்குள் அவ்வப்போது ஏற்படும்  கருத்து வேறுபாடுகளை அவ்வப்போது சரிசெய்து ஒற்றுமையோடு ஒரே குடும்பமாக சகோதர சகோதரிகளாக இருப்பதை உறுதிசெய்வது.

 13. மாவட்ட பொறுப்பாளர்கள் சங்க வளர்ச்சிக்காக கூறும் நல்ல திட்டங்களை ஆலோசித்தல்.

14.மாநிலத் துணைத் தலைவர் மதிப்புமிகு V.ராஜசேகரன் அய்யா அவர்களுக்காக ஒற்றுமையோடு குரல் தந்த அனைவருக்கும் நன்றியை தெரிவிப்பது.

 15. ஆசிரியப் பெருமக்களின் வாழ்வில் ஒளியேற்றி மறைந்திட்ட *டாக்டர் கலைஞர்* அவர்களுக்கு தலைவர் தலைமையில் கருத்தரங்கம் நடத்துவது குறித்து ஆலோசனை செய்தல்.
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
 *தமிழ்நாடு ஆசிரியர்* முன்னேற்ற சங்கம்,,,TAMS,
 *திருவாரூர் மாவட்டம்..*

ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்புக்கு தடை: கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் TAMS மாநிலத்தலைவர் பேட்டி...


Popular Posts