பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க, பிஎச்டி கட்டாயம் முடித்திருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை அடுத்த ஆண்டு ஜுலை மாதம் முதல் அமலுக்கு வர இருக்கிறது.
தரமான பேராசிரியர்களை பணிமயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில், பல்கலைக்கழக மானியக்குழுவின் புதிய விதிமுறைகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி நேரடியாக உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்போர் அல்லது உதவி பேராசிரியர்களாக பதவி உயர்வு பெறுவோர், பிஎச்டி படிப்பை முடித்திருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு ஜுலை ஒன்றாம் தேதியில் இருந்து இந்த விதிமுறை அமல்படுத்தப்பட இருக்கிறது.உலக அளவில் சிறந்த 500 பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் இருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

