Monday, January 14, 2019

குடியரசு தினத்தன்று அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் - பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு


  குடியரசு தினத்தன்று அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டத்தை தவறாமல் நடத்தவேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
 ஒவ்வொரு ஆண்டும், பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதலின் கீழ், அனைத்து பள்ளிகளிலும் ஆகஸ்ட் 15, நவம்பர் 14, ஜனவரி 26-ம் தேதிகளில் பெற்றோர் - ஆசிரியர் கழகக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
  அதன்படி, வரும் ஜனவரி 26-ம் தேதி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், பெற்றோர் - ஆசிரியர் கழகக்கூட்டத்தை நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
 இக்கூட்டத்தில், மாணவர்களின் வளர்ச்சி,பள்ளியின் வளர்ச்சி, மாணவர்களின் கற்றல் அடைவுகள், மாணவர்களின் தனித்திறமையை ஊக்குவிக்கும் வழிமுறைகள் பற்றி பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் இணைந்து விவாதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Popular Posts