Showing posts with label பத்திரிக்கை செய்தி. Show all posts
Showing posts with label பத்திரிக்கை செய்தி. Show all posts

Friday, December 21, 2018

அரசு பள்ளிகளில், இனி கட்டாயமாக ஆங்கிலம் பேச வேண்டும்!! அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி!!


அரசு பள்ளிகளில், இனி கட்டாயமாக ஆங்கிலம் பேச வேண்டும்!! அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி!!

 கோபி, நாமக்கல்பாளையத்தில் நடந்த சிறப்பு மனு நீதி நாள் முகாமில் கலந்துகொண்ட கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம், "

பன்னிரெண்டாம் வெறுப்பு முடிந்தவுடனே மாணவ, மாணவிகளுக்கு வேலை கிடைக்குமாறு புதிய பாட திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கன்வாடி பள்ளியுடன் இணைந்து 4 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குழந்திங்க்ளுக்கும் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்பு தொடங்க இருக்கின்றோம். 

இதனை தொடர்ந்து இக்குழந்தைகளுக்கு ஆங்கிலம் சரளமாக பேச பயிற்சியும் வழங்க இருக்கின்றோம். அதனுடன், அனைத்து அரசு பள்ளிகளிலும் ''மெய் நிகர்''(ஸ்மார்ட் க்ளாஸ்) வகுப்பறை அமைக்கப்படும்.' என்றும் கூறியுள்ளார். 

 இப்பாடத்திட்டம் அவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் விதத்தில் இருக்கும். மேலும், மாணவர்களுக்கு புதிய வகையான சீருடைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம் என்றும் கூறினார்.

அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவு



முன் அனுமதியின்றியும், விடுப்பு விண்ணப்பம் அளிக்காமலும் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையில், முன் அனுமதியின்றியும் விடுப்பு விண்ணப்பம் அளிக்காமலும் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். 

அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் போது அல்லது ஒழுங்கு நடவடிக்கையின் போது உயிரிழந்தால், பணி விதிகளின்படியே ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்”  இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த கல்வியாண்டு முதல் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை தமிழக அரசு அறிவிப்பு




ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை

வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை

நிதித்துறை அறிவுறுத்தலின்படி கல்வித்துறை அதிரடி முடிவு

உபரி ஆசிரியர்கள் இருக்கும் போது பணி நீட்டிப்பு வழங்குவதால், பணம் விரயம் என நிதித்துறை கருத்து

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்

கல்வி ஆண்டில் பாதியில் ஓய்வு பெற்றால் அடுத்த ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு செய்யும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது.

GO

PDF LINK CLICK HERE



தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 4 மாதமாக சம்பளம் இல்லாமல் தவிப்பில் பட்டதாரி ஆசிரியர்கள்


2.8 லட்சம் அரசு பள்ளிகளை இணைக்க முடிவு கல்வியாளர்கள் ஆசிரியர்கள் எதிர்ப்பு...


Popular Posts