Wednesday, May 17, 2023

தமிழ்நாடு அரசு: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு




தமிழ் நாடு அரசு : 01.01.2023 முதல் அறிவிக்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு 01.04.2023 முதல் 3 மாதம் தள்ளி அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது - இனிவரும் காலங்களில் ஒன்றிய அரசு அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் அதைப் பின்பற்றி  தமிழ்நாடு அரசும் செயல்படுத்தும் என முதலமைச்சர் அறிவிப்பு!!


தமிழ்நாடு அரசு 2021 ஆம் ஆண்டு மே மாத பதவி ஏற்றது முதல் ஒன்றிய அரசு எப்போதெல்லாம் அகவிலைப்படி அறிவிக்கிறதோ அப்போதெல்லாம் அறிவிக்காமல் ஆறு மாதம் தள்ளியே அறிவித்து வந்தது குறிப்பாக சொல்ல வேண்டுமானால் 01.06.2021 அறிவிக்க வேண்டிய அகவிலைப்படியை ஆறு மாதம் தள்ளி 01.01.2022 முதல் வழங்கினார்கள். 01.01.2022 அறிவிக்க வேண்டிய அகவிலைப்படையை 01.06.2022 முதலும் 01.06.2022 அறிவிக்க வேண்டிய அகவிலைப்படையை 01.01.2023 அன்றும் 01.01.2003 அறிவிக்க வேண்டிய அகவிலைப்படியே 01.04.2023 தள்ளி அறிவித்துள்ளது.

 இனிவரும் காலங்களில் ஒன்றிய அரசு எப்போதெல்லாம் அகவிலைப்படி உயர்வை அறிவிக்கின்றதோ அதே நாளில் தமிழ்நாடு அரசும் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கும் என்ற செய்தியை தமிழக முதலமைச்சர் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
38% ஆக உள்ள அகவிலைப்படி தற்போது 42% ஆக அதிகரித்து உள்ளது. இதனால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒய்வூதியதாரர்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெறுவார்கள்.



Popular Posts