Monday, July 31, 2017

TAMS-ன் கடலூர் மாவட்ட பொதுக்குழு: 30.07.2017 அன்று மாவட்ட தலைவர் மு.அம்பேத்கார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.





தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கடலூர் மாவட்டம் சார்பில்30.07.17 இன்று மாலை 5 மணி அளவில் மாவட்ட பொதுக்குழு சிதம்பரம் கொத்தங்குடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாவட்ட தலைவர் மு.அம்பேத்கார் தலைமையில்  நடைபெற்றது

பொதுக்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

1. புதிதாக தரம் உயர்த்தப்பட்ட 150 உயர்நிலைப்பள்ளி கள்  மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள ஆசிரியர் காலிப்ணியிடங்களில் மீண்டும் ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தி காலிப்பணியிங்களை நிரப்ப வேண்டும்.


2. தீர்மானம் 1 ஐ நடைமுறைபடுத்த வலியுறுத்தி வருகிற ஆகஸ்ட் 2 ஆம் தேதி
மாநில தலைவரின் அறிவுரைப்படி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடத்துவது 

3. ஆகஸ்ட் 5 ல் ஜாக்டோ-ஜியோ நடத்தும் சென்னை கோட்டை நோக்கி பேரணியில் கடலூர் TAMS சார்பாக குறைந்த பட்சம் 200 ஆசிரியர்கள் கலந்துகொள்வது


4. தன்பங்களிப்பு ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைபடுத்த வேண்டும்


5. ஏழாவது ஊதியக்குழுவை விரைவில் அமுல்படுத்த வேண்டும்

6. 20 % இடைக்கால நிவாரனம் உடனடியாக வழங்கிட வேண்டும்



Popular Posts