AADHIRA MATHS YOU TUBE FB PAGE
TAMS NEWS
- TAMS கடலூர் செய்தி (64)
- அரசாணைகள் GO'S (28)
- பத்திரிக்கை செய்தி (19)
- TAMS மாநில செய்தி (13)
- JACTTO GEO (9)
- செய்திகள் ALL (7)
- ATTENDENCE APP (3)
- CPS செய்திகள் (2)
- RMSA செய்தி (1)
- SSLC MATHS (1)
- செய்திகள் RTI (1)
Sunday, January 20, 2019
Saturday, January 19, 2019
Friday, January 18, 2019
Monday, January 14, 2019
2021 ஆம் ஆண்டு ஜூலை1 முதல் உதவி பேராசிரியர் பணிக்கு பிஎச்டி கட்டாயம் முடித்திருக்க வேண்டும்: பல்கலைக்கழக மானியக்குழு
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க, பிஎச்டி கட்டாயம் முடித்திருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை அடுத்த ஆண்டு ஜுலை மாதம் முதல் அமலுக்கு வர இருக்கிறது.
தரமான பேராசிரியர்களை பணிமயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில், பல்கலைக்கழக மானியக்குழுவின் புதிய விதிமுறைகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி நேரடியாக உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்போர் அல்லது உதவி பேராசிரியர்களாக பதவி உயர்வு பெறுவோர், பிஎச்டி படிப்பை முடித்திருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு ஜுலை ஒன்றாம் தேதியில் இருந்து இந்த விதிமுறை அமல்படுத்தப்பட இருக்கிறது.உலக அளவில் சிறந்த 500 பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் இருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தன்று அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் - பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு
குடியரசு தினத்தன்று அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டத்தை தவறாமல் நடத்தவேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும், பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதலின் கீழ், அனைத்து பள்ளிகளிலும் ஆகஸ்ட் 15, நவம்பர் 14, ஜனவரி 26-ம் தேதிகளில் பெற்றோர் - ஆசிரியர் கழகக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதன்படி, வரும் ஜனவரி 26-ம் தேதி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், பெற்றோர் - ஆசிரியர் கழகக்கூட்டத்தை நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இக்கூட்டத்தில், மாணவர்களின் வளர்ச்சி,பள்ளியின் வளர்ச்சி, மாணவர்களின் கற்றல் அடைவுகள், மாணவர்களின் தனித்திறமையை ஊக்குவிக்கும் வழிமுறைகள் பற்றி பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் இணைந்து விவாதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
Sunday, January 13, 2019
Saturday, January 12, 2019
சேலம் மாவட்ட TAMS சார்பில் இன்று (11.1.2019) மாலை 6.15க்கு சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களை சந்தித்த மாவட்ட நிர்வாகிகள் TAMS 2019 ஆம் ஆண்டு காலண்டர் கொடுத்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்நாடுஆசிரியர் முன்னேற்ற சங்கம்,
சேலம் மாவட்டம் சார்பில் இன்று (11.1.2019) மாலை 6.15க்கு சேலம் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் அவர்களை சந்தித்து , இவ்வாண்டுக்கான நமது சங்க நாள் காட்டி மற்றும் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தோம்.இதில் முக்கியபொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
🎈🎈🎈🎈🎈🎈
இப்படிக்கு
மாவட்ட மையம்
TAMS
சேலம் மாவட்டம்
🌈🌈🌈🌈🌈🌈🌈
Subscribe to:
Posts (Atom)

















































