Wednesday, May 17, 2023

தமிழ்நாடு அரசு: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு




தமிழ் நாடு அரசு : 01.01.2023 முதல் அறிவிக்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு 01.04.2023 முதல் 3 மாதம் தள்ளி அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது - இனிவரும் காலங்களில் ஒன்றிய அரசு அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் அதைப் பின்பற்றி  தமிழ்நாடு அரசும் செயல்படுத்தும் என முதலமைச்சர் அறிவிப்பு!!


தமிழ்நாடு அரசு 2021 ஆம் ஆண்டு மே மாத பதவி ஏற்றது முதல் ஒன்றிய அரசு எப்போதெல்லாம் அகவிலைப்படி அறிவிக்கிறதோ அப்போதெல்லாம் அறிவிக்காமல் ஆறு மாதம் தள்ளியே அறிவித்து வந்தது குறிப்பாக சொல்ல வேண்டுமானால் 01.06.2021 அறிவிக்க வேண்டிய அகவிலைப்படியை ஆறு மாதம் தள்ளி 01.01.2022 முதல் வழங்கினார்கள். 01.01.2022 அறிவிக்க வேண்டிய அகவிலைப்படையை 01.06.2022 முதலும் 01.06.2022 அறிவிக்க வேண்டிய அகவிலைப்படையை 01.01.2023 அன்றும் 01.01.2003 அறிவிக்க வேண்டிய அகவிலைப்படியே 01.04.2023 தள்ளி அறிவித்துள்ளது.

 இனிவரும் காலங்களில் ஒன்றிய அரசு எப்போதெல்லாம் அகவிலைப்படி உயர்வை அறிவிக்கின்றதோ அதே நாளில் தமிழ்நாடு அரசும் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கும் என்ற செய்தியை தமிழக முதலமைச்சர் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
38% ஆக உள்ள அகவிலைப்படி தற்போது 42% ஆக அதிகரித்து உள்ளது. இதனால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒய்வூதியதாரர்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெறுவார்கள்.



Tuesday, May 16, 2023

தொடக்கக் கல்வித் துறைக்கு திருத்திய கலந்தாய்வு அட்டவணை வெளியீடு!!!



தொடக்கக் கல்வித் துறைக்கு திருத்திய கலந்தாய்வு அட்டவணை வெளியீடு!!!




Monday, May 15, 2023

பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19 அன்று வெளியிடப்படும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

 

பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே19 அன்று வெளியிடப்படுகின்றன. கீழ்கண்ட இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்
👇👇👇👇👇👇👇



 

Monday, May 8, 2023

பள்ளிக்கல்வித்துறை: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இன்று முதல் முதுகலை ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வி த்துறை இயக்குனர் உத்தரவு


 

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில், 7,55,451 மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 94.03% பேர் தேர்ச்சி.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில், 7,55,451 மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 94.03% பேர் தேர்ச்சி.


மாணவியர்களில் 96.38% தேர்ச்சி. மாணவர்களில் 91.45% தேர்ச்சி. மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் தேர்ச்சி. வழக்கம் போல மாணவர்களை விட மாணவியர் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


அரசுப் பள்ளிகளில் 89.80% தேர்ச்சி.

அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.99%

தனியார் பள்ளிகள் 99.08% தேர்ச்சி.

326 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.


தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகள்







தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை பிளஸ் 2 தேர்வுத்துறை மே8 இன்று வெளியிடு

சென்னை: தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய சுமார் 8.17 லட்சம் பேருக்கான தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடுகிறார். மாணவர்கள் கீழ்கண்ட இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

www.tnresults.nic.in

www.dge.tn.gov.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in 

Sunday, May 7, 2023

2022-23 பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இடம் மாறுதல் கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைத்து பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு


2022-2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி தற்போது நிர்வாக காரணங்களுக்காக மேற்காண் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகள் (தொடக்கக் கல்வி& பள்ளிக்கல்வி) தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. கலந்தாய்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்ற தகவல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

PDF LINK CLICK HERE 👇👇👇




 

Wednesday, April 26, 2023

2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மற்றும் கலந்தாய்வு அட்டவணை!!!

2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மற்றும் கலந்தாய்வு அட்டவணை!!!


PDF LINK CLICK HERE

2023-2024 TRANSFER COUNCILING


Friday, March 31, 2023

24.03.2023 அன்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடைபெற்ற JACTTO GEO மனித சங்கிலி போராட்டம்

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின்* மாநில அமைப்பின் முடிவின்படி 24.03.2023 அன்று *கடலூர் மாவட்டத்தில்* சிதம்பரம், கடலூர், விருத்தாச்சலம் ஆகிய மூன்று இடங்களில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் எழுச்சியோடு நடைபெற்றது. இதில் சிதம்பரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவரும் கடலூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான மு.அம்பேத்கார் அவர்களின் தலைமையில் மிக எழுச்சியோடு நடைபெற்றது. இதில் *திரு இளஞ்செழியன்* JACTTO GEO வட்ட ஒருங்கிணைப்பாளர் &தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயலாளர் அனைவரையும் வரவேற்றார். முன்னிலை 1.*வெ.வாசுதேவன்* மாநிலச் செயலாளர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம். 2.*திருமு.ஆ. தமிழ்குமரன்* மாநில துணைத் தலைவர் அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு 3.*இரா.அறிவழகன்* மாவட்ட தலைவர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 4.*திருஎன். வைத்தியலிங்கம்* மாவட்ட துணை தலைவர் பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் *எஸ்.விமல் ராம்* மாவட்ட பொறுப்பாளர், பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் *திரு.பாபு* மாநில கூடுதல் தலைவர் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி *திரு கார்மேகம்* மாவட்ட அமைப்புச் செயலாளர், *திரு.பாண்டியன்* மாவட்ட பொருளாளர், *திரு. மதியழகன்.* மாவட்ட பொறுப்பாளர் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் *திரு வேதாரத்தினம்* மாவட்ட செயலாளர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம். *திரு.சோழவந்தே* மாவட்டத் தலைவர் தமிழகஆசிரியர் கூட்டணி * M.M.குமார்.* மாநில துணை தலைவர் அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு *திரு செந்தில்குமார்.* மாநில ஒருங்கிணைப்பாளர் பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் *அ.பன்னீர்செல்வம்* மாநில பொருளாளர், அண்ணாமலை பல்கலைக்கழக பணிநிரவல் ஊழியர்கள் நலச் சங்கம் *திரு ஏ.பிரகாஷ்* வட்டச் செயலாளர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் *திரு.குலோத்துங்கன்* வட்டத் தலைவர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் *திரு அம்பிகாபதி* *திரு.ரவி* சாலை பணியாளர் சங்கம் *திரு.மகாலிங்கம்* *திரு.தமிழ்ச்செல்வன்* ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் மேலும் இதில் *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்* சார்பில் இரா.மகேந்திரவர்மன். *மாவட்ட செயலாளர்.மு* க.திருஞானசம்பந்தம். *மாவட்ட ஒருங்கிணைப்பாளர்* த.செந்தில்குமார் *மாநில செயற்குழு உறுப்பினர்* தி.இலங்கேசன். *மாநில செயற்குழு உறுப்பினர்* பி.சஞ்சீவ் குமார் *மாநில செயற்குழு உறுப்பினர்* க.பிரபு *மாவட்ட சட்ட ஆலோசகர்* பூ.அன்புச் செழியன் *மாநில செயற்குழு உறுப்பினர்* க.லதா *மாவட்ட மகளிர் அணி செயலாளர்* உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த மனித சங்கிலி போராட்டத்தில் மாவட்ட JACTTO GEO வின் அழைப்பை ஏற்று இதில் கலந்துகொண்டு போராட்டம் மிக எழுச்சியோடு நடைபெற காரணமாக இருந்த அனைத்து சங்க உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இன்றைய மனித சங்கிலி போராட்டத்தில் தங்களது பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களை கலந்து கொள்ள செய்து மனித சங்கிலி போராட்டம் மிக மிக எழுச்சியோடு நடைபெற உறுதுணையாக இருந்த அனைத்து சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மனித சங்கிலி போராட்ட சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு அளித்த சக *மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்* தோழர்கள் ஜெகநாதன், அரிகிருஷ்ணன், ரவிச்சந்திரன், மணவாளன்,ஆகியோருக்கு மீண்டும் ஒரு முறை நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏 *நன்றி நன்றி நன்றி* 🙏🙏🙏🙏🙏🙏🙏

Friday, September 16, 2022

மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) அவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள்












மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) அவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள்






PDF LINK CLICK HERE  

மாவட்ட கல்வி அலுவலர் (உயர்நிலை) அவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள்





PDF LINK CLICK HERE


மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள்




 

பள்ளிக் கல்வித் துறை நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றம் - அரசாணை எண் 151, நாள்: 09.09.2022 வெளியீடு!!! 👇👇👇







PDF LINK CLICK HERE


 

Sunday, August 14, 2022

ஆசிரியர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க ஆசிரியர் மனசு திட்டம் தொடக்கம்.... அமைச்சர் அன்பில் பொய்யாமொழி தகவல்

ஆசிரியர்களின் மனசு' திட்டம் தொடக்கம்-அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்.... Mail id - உருவாக்கம்.....
ஆசிரியர்களின் கோரிக்கைகளை தெரிவிக்க ‘ஆசிரியர்களின் மனசு’ திட்டம் தொடங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து கல்வியாளர் சங்கம் சார்பில் 'ஆசிரியர்களுடன் அன்பில் நம்மில் ஒருவர்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை கலெக்டர் கவிதாராமு தொடங்கி வைத்தார். இதில், அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர். இதனைதொடர்ந்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசுகையில், ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குறுதிகளை அளித்துவிட்டு செல்கிற இயக்கம் இல்லை. 'ஆசிரியர்களின் மனசு' என்ற பெட்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். பணி பாதுகாப்பு சட்டம், பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம், புதிய திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் aasiriyarmanasu@gmail.com, aasiriyarkaludananbil@gmail.com என்ற இ.மெயில் முகவரியில் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்றார். நிகழ்ச்சியில் ஆசிரியர், ஆசிரியைகள், கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Thursday, February 6, 2020

03.02.2020 அன்று மாலை TAMS கடலூர் பொறுப்பாளர்கள் சிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) சந்திப்பு






*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்*
*கடலூர் மாவட்டம்*
 03.02.2020 இன்று மாலை 5.30 மணி அளவில் 
*சிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலர்* அவர்களை சந்தித்து நமது சங்கத்தின் 2020 காலண்டர் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் 

மாவட்ட தலைவர் *அம்பேத்கார்*

மாவட்ட பொருளாளர் 
*மகேந்திரவர்மன்* 

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் 
*திருஞானசம்பந்தம்* 

மாவட்ட மகளிரணி செயலாளர்
*லதா*

மாநில தணிக்கை குழு உறுப்பினர் 
*சந்திரபாபு*

மாநில பொதுக்குழு உறுப்பினர் 
*இலங்கேசன்*

மாவட்ட சட்ட ஆலோசகர் 
*பிரபு*

மாவட்ட துணை தலைவர் 
*ஜெயக்குமார்*

மாவட்ட துணை தலைவர் *வைத்தியநாதன்*

மற்றும் கல்வி மாவட்ட பொறுப்பாளர்
*சஞ்சீவ் குமார்*
மற்றும் 
*அன்புமணி*

உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Sunday, February 2, 2020

31.01.2020 அன்று கடலூர் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களை சந்தித்து நமது பேரியக்கத்தின் மாதாந்திர நாட்காட்டி வழங்கப்பட்டது.









தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்,கடலூர் மாவட்டம்
*******************************************************************************
இளைய தலைமுறை ஆசிரியர்களின்
நம்பிக்கை நட்சத்திரம்,

CPS ஒழிப்புப் போராளி

திரு.கு.தியாகராஜன் அவர்களின்

வழிகாட்டுதலின்படி 31.01.2020 அன்று கடலூர்

முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களை
சந்தித்து நமது பேரியக்கத்தின்
மாதாந்திர நாட்காட்டி வழங்கப்பட்டது.
மேலும், 
தேர்வுப்பணிகளில் உரிய அரசு விதிகளை
கடைபிடித்து நியமனங்கள் செய்யப்பட
வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்ளிட்ட
மனு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில்
மு அம்பேத்கார்
மாவட்ட தலைவர்

சு.ரமேஷ்
மா.செயலர்

இரா.மகேந்திரவர்மன்
மாவட்ட பொருளாளர்

நா.தாமோதரன்
மாவட்ட தலைமை நிலைய செயலாளர்

க.திருஞானசம்பந்தம்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்

க.செல்வவிநாயகம்
மாவட்ட செய்தித் தொடர்பாளர்

இரா. இராமமூர்த்தி
மாவட்ட துணை செயலாளர்

கு.பாஸ்கர்
மாவட்ட துணைச்செயலாளர்

கே.உதயகுமார்
மாவட்ட துணைத்தலைவர்

அரவிந்த் கோஷ்
மாவட்ட அமைப்பு செயலாளர்

அ.அருள்ராஜ்
மாவட்ட தணிக்கைக்குழு

வைத்தியநாதன்
மாவட்ட துணைத்தலைவர்

பிரபு
மாவட்ட சட்ட ஆலோசகர்

தினேஷ்
புவனகிரி வட்டத் தலைவர்

ஆனந்த்
புவனகிரி வட்ட துணைத் தலைவர்

ஜி இளையராஜா
புவனகிரி துணைச் செயலாளர்

முருகவேல்
குறிஞ்சிப்பாடி வட்ட ஒருங்கிணைப்பாளர்

ரவீந்திரன்
குறிஞ்சிப்பாடி வட்ட தலைவர்

சிவஞானம்
குறிஞ்சிப்பாடி வட்ட பொருளாளர்

மற்றும் மாவட்ட நிர்வாகிகள்
இராம்குமார், புருஷோத்தமன்

சிறப்பு அழைப்பாளர்களாக…
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள்
ஆ.கிருஷ்ணமூர்த்தி
சக்திவேல்

ஆகியோர் கலந்துகொண்டனர்.

🤝🤝🤝🤝🤝🤝

செய்தி: 
க.செல்வவிநாயகம்
மா.செ.தொடர்பாளர்

Popular Posts